ஜனவரி 27, 2026 அன்பிற்குரிய வாசகர்களுக்கு, வணக்கம். கடந்த சில ஆண்டுகளாக நான் சங்க இலக்கியத்தின் ஒரு பகுதியாகிய பத்துப்பாட்டு நுல்களைப் படித்து, அதிலுள்ள பத்துப் பாட்டுகளுக்கும் எளிய உரையை எழுதி அவற்றைப் பதிவு செய்திருக்கிறேன். பத்துப்பாட்டில் உள்ள பாடல்கள்: முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறபாணாறுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மதுரைக் காஞ்சி. அந்தப் பதிவுகளுக்கான பட்டியலையும் அவற்றிற்கான சுட்டிகளையும் https://myblogslist2023.blogspot.com என்ற பதிவில் காணலாம் பத்துப்பாட்டிலுள்ள பாட்டுகள் சங்ககாலத் தமிழ் மக்களின் வாழ்வியல், விருந்தோம்பல், உணவு வகைகள், மன்னர்களின் கொடைத்திறம், ஆகியவற்றை மிகைப்படுத்தாமல், புனைந்துரைகள் எவையும் இல்லாமல், தெள்ளத்தெளிவாகக் காணொலிபோல் காட்டுகின்றன. இந்தப் பாட்டுகள் மிக நீண்ட பாடல்களாக இருப்பதால் அவற்றைப் பள்ளி அல்லது கல்லூரிப் பாடநூல்களில் சேர்ப்பதில்லை. ஆகவே நம்மில் பலரும் அவற்றைப் படித்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய உரையில் ஒவ்வொரு பாட்டின் மூலம்...